Thursday, June 26, 2025
Huisதாயகம்யாழில் உயிரிழந்த தமிழினியின் மரணத்தில் சந்தேகம்; தீவிர விசாரணையில் பொலிசார்..!

யாழில் உயிரிழந்த தமிழினியின் மரணத்தில் சந்தேகம்; தீவிர விசாரணையில் பொலிசார்..!

யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் தமிழினி மரணம் தற்கொலை அல்ல கொலை என தந்தை பொலிஸில் புகார் அளித்த நிலையில் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உதவி பிரதேச செயலாளர் தமிழினி, தீ வைத்து உயிரிழந்ததாக கூறப்பட்ட மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் வந்ததால் சாவகச்சேரி பொலிஸார் நேற்று (01) மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஆறு மாத கர்ப்பிணியாக இருந்த பெண் அரச உத்தியோகஸ்தர் கடந்த பெப்ரவரி 16 ஆம் திகதி யாழ் போதனா வைத்திய சாலையில் தீக்காயங்களால் உயிரிழந்தார்.

மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையின்போது இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் தவறுதலாக தீப்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

எனினும் , சமர்ப்பிக்கப்பட்ட மேலும் சில சாட்சியங்களின் அடிப்படையில், அது தற்கொலை என்று தீர்மானிக்கப்பட்ட பின்னர், அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இறந்த உதவி பிரதேச செயலாளரின் கணவர் யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கிராம அலுவலராக பணிபுரிகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மனைவியும் கணவரும் அறையில் மெழுகுவர்த்தி ஏற்ற சென்ற போது உதவி பிரதேச செயலாளரின் உடலில் தீப் பிடித்ததாக கூறியுள்ளனர். உயிரிழந்த தமிழினி தனது பணியை அர்ப்பணிப்புடன் செய்த அதிகாரியாக மக்களிடையே பிரபலமானவர்.

இதற்கிடையில், பெண்ணின் தந்தை பி. சண்முகராஜா கோப்பாய் பொலிஸில் புகார் அளித்து, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானவை என்றும், இது ஒரு கொலை என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழினியின் மரணம் தொடர்பாக மேலும் அநாமதேய புகார்களும் தொலைபேசி அழைப்புகளும் பொலிஸாருக்கு வந்துள்ளதாக கூறப்படும் நிலையில், கோப்பாய் பொலிஸார் மீள விசாரணையை தொடங்கியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!