Monday, June 2, 2025
Huisதாயகம்யாழில் சுடலையில் இருளில் தங்கும் பொலிசார்; கண்டு கொள்ளாத அரச நிறுவனங்கள்..!

யாழில் சுடலையில் இருளில் தங்கும் பொலிசார்; கண்டு கொள்ளாத அரச நிறுவனங்கள்..!

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிசார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய துப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர் .

குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,

அண்மையில் சித்திப்பாத்தி மயானத்தில் தகன மேடை அமைப்பதற்காக தோண்டப்பட்ட போது மனித எச்சங்கள் வெளிவந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதியும் குறித்த பகுதியை பார்வையிட்டு சென்றார்.

குறித்த பகுதியின் பாதுகாப்புக்காக இரு காவல்துறையினர் 24 மணித்தியாலமும் பாதுகாப்பு கடமையில் உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இன்றி இருளில் காத்திருக்க வேண்டிய துப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொலிசார் மயானத்தில் உணவு உண்பதில் இருந்து தமது அன்றாட செயல்பாடுகளை இரவு நேரங்களில் மேற்கொள்வதற்கு மின்விளக்கு இன்மையால் பல்வேறு அசெளகரிகங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!