யாழ் மத்திய கல்லுாரிக்கு முதல் முதலாக பெண் அதிபர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குறித்த பெண் அதிபர் கல்வி அமைச்சால் நியமனம் செய்யப்பட்ட போது ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அப்போதய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் குறித்த நியமனம் பிற்போடப்பட்டு நிலமை சுமூகமாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திரகுமார் என்பவர் அதிபராக தொடர்ந்து கடமையாற்றி வந்திருந்தார். தற்போதைய அனுர அரசாங்கம் பதவியேற்ற பின் குறித்த பெண் அதிபர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
அண்மையில் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments