Tuesday, June 10, 2025
Huisதாயகம்கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ்; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை..!

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய பொலிஸ்; மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை..!

கிளிநொச்சியில் அரச உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பொலிசாருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த விடயத்தினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,

கடந்த வாரம் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான அரச உத்தியோகத்தர் காரணமின்றி தன்னை தாக்கி கைவிலங்கிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவிட்டுள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி மனித உரிமைகளை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட காவல்துறை அதிகாரி ஆகியோரை விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!