முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, விக்ரமசிங்கவின் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய தலைமை காவல் பரிசோதகர் அசோக ஆரியவன்ஸ, தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றத்திற்கு தேசிய காவல் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அசோக ஆரியவன்ஸ கடந்த 23 ஆண்டுகளாக விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அணியில் பணியாற்றியுள்ளார். இதில் 15 ஆண்டுகள் அவர் முக்கிய தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
இந்த இடமாற்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் தற்போது கைதிலிருக்கும் முன்னாள் எம்பி சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விக்ரமசிங்கவின் இடையிலான தொலைபேசி உரையாடலைப் பெற முயன்றதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக குறித்த அதிகாரி CID அதிகாரியொருவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Recent Comments