Saturday, January 24, 2026
Huisதாயகம்யாழ் செம்மணியில் குழந்தைகள் உட்பட 18 எலும்புக் கூடுகள் மீட்பு..!

யாழ் செம்மணியில் குழந்தைகள் உட்பட 18 எலும்புக் கூடுகள் மீட்பு..!

செம்மணியில் குழந்தைகள் எலும்புக்கூடு மீட்பு ,18 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ் செம்மணி பகுதியில் குழந்தைகளுடன் புதைக்கப்பட்டு இருந்த, புதைகுழி ஒன்று தோண்டப்பட்டது .

இவ்வாறு நடைபெற்று வந்த அகழ்வு பணியில் 18 எலும்பு கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடையாளம் காணப்பட்டுள்ள 18 எலும்பு கூடுகளில் ஐந்து எலும்பு கூட்டுத் தொகுதியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. அவை சட்ட வைத்திய அதிகாரியின் என் பாதுகாப்புக்குள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல சில எலும்பு கூட்டுத் தொகுதிகள் இணைந்து காணப்படுவதால், அவை ஒரே இடங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப்படுகிறது .

இதுவரையில் மீட்கப்பட்ட நிர்வாணமாக மீட்கப்பட்டதால் அவை வெறுமையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது .

திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கை என்பதாகவும் ,இராணுவத்தினரே இந்த படுகொலைகளை மேற்கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

அப்பாவிகளை கைது செய்து அவர்களை மிக கொடூரமாக கொலை செய்து இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது அம்பலமாகி இருக்கின்றது.

செம்மணி புதைகுழி விவகாரம் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!