Sunday, June 8, 2025
Huisதாயகம்யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

யாழ் செம்மணி புதைகுழி தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் அறிவிப்பு..!

அரியாலை – செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்தப் புதைகுழியில் இருந்து புதைகுழியை தொடர்ச்சியாக அகழ வேண்டும் என்று அவர்களின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணியும் அகழ்வை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் திருப்திப்படும் வரையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனின் கோரிக்கையின் அடிப்படையில் பாதீடு சமர்ப்பிக்கப்பட்டு நீதி அமைச்சின் ஊடாக நிதியை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அத்துடன், தொல்லியல் தடயவியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் அபிப்பிராய அறிக்கை மற்றும் அகழ்வில் திருப்தியடைவதாக தெரிவித்த நீதிவான், அவரே தொடர்ந்தும் அகழ்வில் ஈடுபடுவதற்கு அனுமதியும் வழங்கினார்.

அதேசமயம் இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகள் இன்றைய தினத்துடன் நிறைவுக்கு வருகிறன.

மேலும், இதுவரை 17- 18 மண்டையோட்டு தொகுதிகள் முழுமையாகவும் பகுதியளவிலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் 5 முழுமையாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!