பொசன் வாரத்தை முன்னிட்டு இன்று (07) முதல் 12 ஆம் திகதி வரை அநுராதபுரம் பகுதியில் உள்ள பல பாடசாலைகள் மூடப்படும்.
குறித்த அறிவிப்பை வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அநுராதபுரம் நகரம் மற்றும் மிஹிந்தலையைச் சுற்றியுள்ள பாடசாலைகள் மூடப்படவுள்ளது.
இந்த நிலையில், பொசன் வாரம் இன்று தொடங்கி 13 ஆம் திகதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.
Recent Comments