Monday, October 27, 2025
Huisதாயகம்அர்ச்சுனாவின் எம்.பி பதவி யூலை 2உடன் பறிபோகும்? சங்குக்கு ஆசனம் கிடைக்குமா?

அர்ச்சுனாவின் எம்.பி பதவி யூலை 2உடன் பறிபோகும்? சங்குக்கு ஆசனம் கிடைக்குமா?

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் பதவி தொடர்பான வழக்கு ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்றைய தினம் (26.06.2025) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதன்போது வழக்கை ஜுலை 2ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சில வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த சங்கு கூட்டணி, குறித்த வழக்கின் தீர்ப்பு அர்ச்சுனாவிற்கு எதிராக அமையும் பட்சத்தில் வழக்கின் தீர்ப்பினை தமக்கு சாதகமாக்கி மோசடி மூலம் பெற்ற குறித்த ஆசனத்தை தமக்கு வழங்குமாறு கோரி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கினை தாக்கல் செய்து நிவாரணத்தை பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!