பூஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி, குறித்த கைதி சிறப்பு பிரிவு குற்றவாளிகளை வைத்திருக்கும் அறையில் வைக்கப்பட்டிருந்தார்.
அவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறை அதிகாரிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அவர் எந்த குற்றத்துக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகவில்லை.


Recent Comments