Monday, October 27, 2025
Huisதாயகம்ஆசிரியரால் தாக்கப்பட்டதாக உயர்தர வகுப்பு மாணவன் முறைப்பாடு..!

ஆசிரியரால் தாக்கப்பட்டதாக உயர்தர வகுப்பு மாணவன் முறைப்பாடு..!

பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பு மாணவர் ஒருவர், ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

தாக்கப்பட்டதில் காயமடைந்ததாக கூறப்படும், குறித்த மாணவன் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வகுப்பில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று கொண்டிருந்தபோது, குறித்த ஆசிரியர் தம்மை தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கினிகத்தேனை காவல் நிலையத்துக்கு தாம் முறைப்பாட்டளித்து விட்டு சிகிச்சைக்காக செல்வதற்கு முற்பட்ட போது, தமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள் முச்சக்கர வண்டியில் காவல் நிலையத்திற்கு அருகில் வந்து, தம்மை பலவந்தமாக பாடசாலைக்கு ஏற்றிச் சென்று முறைப்பாட்டை மீளப் பெற அழுத்தம் கொடுக்க முயன்றதாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தாக்குதல் நடந்ததாகக் கூறி சமூக ஊடகங்களில் தவறான அறிக்கையை வெளியிட்டதாக குறித்த மாணவனுக்கு எதிராகவும் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!