Friday, January 23, 2026
Huisதாயகம்தோட்ட கிணற்றில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு..!

தோட்ட கிணற்றில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழப்பு..!

தோட்ட கிணற்றில் வாளியில் மீன் பிடிக்க முற்பட்ட சிறுவன் கிணற்றினுள் தவறி விழுந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளான்.

அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த பிரதீபன் தர்சன் (வயது 10) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளான்.

தனது பேரனாருடன் தோட்டத்திற்கு நீர் இறைக்க சென்ற சிறுவன் , பேரனார் நீர் இறைத்துக் கொண்டிருந்த வேளை , சிறுவன் கிணற்றினுள் வாளியினை விட்டு , மீன் பிடிக்க முயன்ற வேளை , கால் இடறி கிணற்றினுள் விழுந்துள்ளான்.

சிறுவன் கிணற்றினுள் விழுந்ததை அறிந்து அயலவர்களின் உதவியுடன் சிறுவனை மீட்டு , அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!