போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தால் மட்டுமே, தங்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என, வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
‘நீதிக்கான நீண்ட காத்திருப்பு’ எனும் கருப்பொருளில் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் கண்ணீர்க்கதை’ ஆவணப்படம் திரையிடலும், கருத்துப் பகிர்வும் நேற்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றன.

இதில் கலந்து கொண்டதன், பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கான சங்கத்தின் இணைப்பாளர் மெனுவல் உதயச்சந்திரா இதனைத் தெரிவித்துள்ளார்.


Recent Comments