Saturday, January 24, 2026
Huisதாயகம்தன்பாலின சட்டம் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர்..!

தன்பாலின சட்டம் தொடர்பில் உயர்ஸ்தானிகரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நீதி அமைச்சர்..!

தன்பாலின உறவுகளை குற்றமற்றதாக அறிவிக்கும் யோசனை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வெளியிட்ட கருத்தை, நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார மறுத்துள்ளார்.

தன்பாலின திருமணங்களை குற்றமற்றதாக அறிவிக்கும் ஒரு யோசனை தற்போது இலங்கை நாடாளுமன்றத்தில் உள்ளது என்றும், அதனைப் பரிசீலிக்கும் நிலையில் இருப்பதாகவும் இலங்கைக்கான விஜயத்தின் போது ஊடக சந்திப்பில் பேசிய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். தாம் அதனை வரவேற்கின்றதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, உயர்ஸ்தானிகர் குறிப்பிட்ட யோசனை நாடாளுமன்றத்தில் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும், அதுபற்றி எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெளிவுபடுத்தியுள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலையீட்டினால் கல்வித் துறையில் ஏற்பட்ட சட்ட திருத்தங்களால் மாணவர் ஒழுக்கம் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் கலசாராரத்தையும் சீரழிக்க எடுக்கும் முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!