Saturday, January 24, 2026
Huisதாயகம்விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரச அதிகாரிகள்; வடக்கிலும் சிலர்?

விசாரணை வளையத்துக்குள் சிக்கப் போகும் அரச அதிகாரிகள்; வடக்கிலும் சிலர்?

பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல் முறைகேடுகளில் அரசியல்வாதிகளுக்கு ஆதரவளித்ததாகக் கூறப்படும், சுமார் 18 உயர் அரச அதிகாரிகளைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணைக் குழுக்கள் இதற்கான விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.

இதற்கிடையே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்ட உயர் அரச அதிகாரிகள் ஐந்து பேரளவில் தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வங்கிக் கணக்குகளையும், விசாரணைக் குழுக்கள் ஆராய்ந்து வருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிரான மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்தங்கள் தற்போதைக்கு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!