Saturday, January 24, 2026
Huisதாயகம்வடக்கு கல்விப் பணிப்பாளராக கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்..!

வடக்கு கல்விப் பணிப்பாளராக கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்..!

அரச சேவை ஆணைக்குழுவினால் வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக சிரேஷ்ட கல்வி நிர்வாக சேவை அதிகாரி யோகேந்திரா ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோயிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.

1975.10.09 ஆம் திகதி பிறந்தவர் என்பதால் 2035.10.08 ஆம் திகதி வரை சேவையில் இருப்பார். அத்துடன் எதிர்வரும் 21.08.2025 ஆம் திகதி திங்கட்கிழமை வடமாகாண கல்விப் பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் இருந்து துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கமலராஜன் ஆகியோர் நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற போதிலும் சிரேஷ்ட நிலையில் இருந்ததால் ஜெயச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டார்.

பதவியேற்கவுள்ள மாகாணப் பணிப்பாளர் அவர்கள் ஊழல், மோசடிகளுக்கு துணைபோய் வடக்கின் கல்வியை அழிக்கும் அதிகாரிகளின் கபடத்தனமான மாலைக்கும், உபசரிப்புக்கும் மயங்கி அவர்களின் கதிரைகளைக் காப்பாற்றத் துணை போகாது அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக செயற்பட வேண்டும் என்பதே கல்விப் புலம் சார்ந்த அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!