Friday, July 11, 2025
Huisதாயகம்சாராவின் மரணத்தில் சந்தேகம்; மூன்றாவது டி.என்.ஏ சோதனை சர்ச்சையில்..!

சாராவின் மரணத்தில் சந்தேகம்; மூன்றாவது டி.என்.ஏ சோதனை சர்ச்சையில்..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு சாய்ந்தமருது பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சாரா ஜாஸ்மினின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாரா ஜாஸ்மின் எனும், புலஸ்தினி மகேந்திரனும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு பொருப்பானவர் என்பதை உறுதிப்படுத்தப் பயன்படுத்தப்படும் மூன்றாவது டி.என்.ஏ சோதனைக்கான மாதிரிகளை எடுப்பதற்கான நடைமுறை குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், அவர் இறந்தாரா இல்லையா என்பது குறித்து கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“26.04.2019 அன்று சாய்ந்தமருது பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் சாரா ஜாஸ்மின் இறந்தாரா இல்லையா என்பது குறித்து இரண்டு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட டிஎன்ஏ அறிக்கைகள் கோரப்பட்டது.

ஆனால் அந்த அறிக்கைகள் அவரது நெருங்கிய உறவினர்களின் அறிக்கைகளுடன் பொருந்தவில்லை. மூன்றாவது மாதிரியின் டி.என்.ஏ அவரது தாயாரின் டி.என்.ஏவுடன் பொருந்துகிறது.

டி.என்.ஏ மாதிரியை எடுக்கும் செயல்முறை இப்போது கடுமையான சந்தேகத்தின் கீழ் உள்ளது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பாக மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது பிள்ளையான் இந்தத் தகவலை அறிந்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் அந்த நேரத்தில் அவர் புலனாய்வு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹாரா ஹாஷிமை வழிநடத்தியவர்கள் யாராவது இருந்தார்களா என்பது குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம். இது தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க எதிர்பார்க்கிறோம்.

சஹாரா ஹாஷிமின் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் இப்போது நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த விசாரணைகள் அனைத்தும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. 29.04.2019 அன்று நடந்த ஒரு கொலையில், சஹாரானின் குழுவின் சாரா ஜாஸ்மினின் DNA அறிக்கைகள் எதனுடனும் பொருந்தவில்லை அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட DNA மாதிரிகள் கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

சாரா ஜாஸ்மின் சாய்ந்தமர்து தாக்குதலில் இறந்தாரா இல்லையா என்பது குறித்து தற்போது ஒரு கேள்வி எழுந்துள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!