Sunday, August 3, 2025
Huisதாயகம்வடக்கின் கல்வி நிலைமை பின்னடைவுக்கு காரணம் என்ன? பிரதமர் கூறிய காரணம்..!

வடக்கின் கல்வி நிலைமை பின்னடைவுக்கு காரணம் என்ன? பிரதமர் கூறிய காரணம்..!

வட மாகாணத்தில் கல்வி நிலைமை பின்தங்கியுள்ளமைக்கு நிர்வாக ரீதியான பிரச்சினை பிரதான காரணமாக இருப்பதாகப் பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

விரைவில் வடக்கின் கல்வி நிர்வாக அதிகாரிகளை அழைத்துக் கலந்துரையாடி, இதற்குத் தீர்வினை காண இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட கல்வி நிலைமை மற்றும் கல்வி மறு சீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை அதிகாரிகளால் தொடர்ச்சியாக வழங்கப்படும் அழுத்தம் காரணமாக வவுனியாவில் பல ஆசிரியர்கள் அரச சேவையில் இருந்து விலகியுள்ளதுடன் பலர் கடும் மன உளைச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!