தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயது உடைய குறித்த சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி கிராம சேவகர் வழங்கிய தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் திகதி 20ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Recent Comments