Monday, September 15, 2025
Huisதாயகம்யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது..!

யாழில் ஹெரோயின், ஐஸ் போதைப் பொருட்களுடன் நான்கு இளைஞர்கள் கைது..!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 18 வயது இளைஞன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 110 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளுடனும் , 30 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடனும் 18 , 22 மற்றும் 23 வயதுகளுடைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!