கல்முனை, பெரியநீலாவணை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதமுனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அயலவருடன் ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியமையால் இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recent Comments