வவுனியா கோயில் புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறு கூறி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பற்றாக்குறை தொடர்பாக பலமுறை வலயக்கல்வி பணிமனை மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை இதற்கு ஒரு தீர்வினையும் பெற்றுத்தரவில்லை. இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வவுனியா வடக்குவலயக் கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது விரைவில் இவ்வாசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருவதாக தெரிவித்தார்.
இதேவேளை வவுனியா வடக்கில் கடமை புரிந்த ஆசிரியர்கள் பலர் வலயக் கல்விப் பணிப்பாளரின் பழிவாங்கல் செயற்பாடுககள் மற்றும் அதீத அழுத்தம் காரரணமாக வலயத்திலிருந்தும், ஆசிரிய சேவையிலிருந்தும் வெளியேறிச் சென்றுள்ளதுடன் சில ஆசிரியர்களை செயலாளரின் துணையுடன் வெளி வலயங்களுக்கு இடமாற்றி ஆசிரிய வளத்தை விரயம் செய்தும் வருகின்றார்.
இது தொடர்பில் ஆளுநருக்கு அறிவித்த போதும் நடவடிக்கை ஏதுமற்ற நிலையில் உள்ளது. தமிழ் அமைச்சர் ஒருவரின் பின்னணியில் இயங்கும் வடக்கின் கல்வி ஒன்பது மாகாணங்களுள் ஒன்பதாவது இடத்திலும் வவுனியா வடக்கு வலயம் 100 வலயங்களுள் 96வது இடத்திலும் உள்ளது. இதனை 100 வது இடத்திற்கு கொண்டு வந்த பின்னரா ஆளுநர் தீர்வை வழங்குவார் என்பதே மக்கள் முன்னுள்ள கேள்வி.




Recent Comments