வடக்கின் கல்வியில் நிகழும் துஸ்பிரயோகங்கள் மற்றும் மோசடிகள் உட்பட வடக்கின் கல்வி ஊழலை நிறுத்தக் கோரி சிவசேன அமைப்பு ஒரு நாள் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தினை எதிர்வரும் திங்கள் 22.09.2025 ஆளுநர் அலுவலகம் முன்னால் காலை 6.00மணி தொடக்கம் பிப 6.00மணி வரை நடாத்தவுள்ளது.
உங்களின் ஆதரவு வடக்கின் கல்வி ஊழலையும் தொடரும் அதிகார துஸ்பிரயோகத்தையும் இல்லாது ஓழிக்கும்.
எனவே இதற்கான ஆதரவை வழங்கும் முகமாக திங்கட்கிழமை தங்களுக்குப் பொருத்தமான நேரத்தில் கலந்து கொள்ளுங்கள். என ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை வடக்கு மாகாணம் தொடர்ச்சியாக பெறுபேற்றில் ஒன்பதாவது மாகாணமாக இறுதி நிலையிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Recent Comments