யாழில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரினால் இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வடக்கு மாகாண கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள், ஊழல் மோசடிகள், பழிவாங்கல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை உடன் மாற்ற வேண்டும் என கோரியும் யாழ். முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள வடமாகாண கல்வி அமைச்சுக்கு முன்னால் சிவசேனை அமைப்பினரால் இன்றையதினம் (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கிளிநொச்சி சென் தெரேசா பாடசாலைக்கு நியமிக்கப்பட்ட அதிபர் உரிய தகுதி நிலைகளுடன் காணப்படாத நிலையில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதேவேளை கிளிநொச்சியில் சில பாடசாலைகளுக்கு இன்னும் நிரந்தர அதிபர் நியமிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. இந் நிலையில் சென் தெரேசா பாடசாலைக்கு மட்டும் அதிபர் ஓய்வு பெற்று இரு நாட்களில் உரிய தரத்தை பூர்த்தி செய்யாத அதிபரை நியமித்தமை தொடர்பில் தமது கண்டனங்களை தெரிவித்தனர்.
இன்றைய போராட்டத்திற்கு உரிய பதில் உடன் கிடைக்கப்படாத பட்சத்தில் வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும், கொழும்பில் கல்வி அமைச்சு, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.


Recent Comments