Monday, October 27, 2025
Huisதாயகம்ஈழத் தமிழரின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது – சாணக்கியன் MP

ஈழத் தமிழரின் பிரச்சினைகள் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது – சாணக்கியன் MP

தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதாக மட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்த ஒருவருட காலப் பகுதிக்குள் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு என்னவென்று பார்த்தால் ஒன்றுமில்லை.

அண்மையில் யாழிற்குச் சென்று சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள், கொழும்பில் அவசர அவசரமாக சில அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஒருவருட ஆட்சியில் என்ன செய்தீர்கள் என யாரும் கேட்டால் அவமானப்படாமல் இருக்க அவசர அவசரமாக இந்த அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுகள் இதுவரைக்கும் காணப்படவில்லை.

இராணுவ முகாம்களை விடுவிப்பத்தாக சொன்னார்கள், வன இலாகா துறையினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதாக சொன்னார்கள் ஆனால் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை.

தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் தீர்வை ஏற்றுக்கொள்ள முடியாது.

யாழ் செம்மணியில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த விடயத்திற்கு இதுவரை ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் இருந்ததை விட மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் கடந்த கால அரசாங்கள் நாங்கள் செய்ய மாட்டோம் என வெளிப்படையாகச் சொன்னார்கள்.

ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது எங்களுக்கே அதிக கரிசனை இருப்பதாக சொல்லிச் சொல்லியே ஏமாற்றுகின்றனர்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!