Friday, January 23, 2026
Huisதாயகம்மன்னாரில் மக்கள் போராட்டத்தில் இணைந்த ஸ்ரீதரன் எம்.பி..!

மன்னாரில் மக்கள் போராட்டத்தில் இணைந்த ஸ்ரீதரன் எம்.பி..!

மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்சியாக போராடி வருகின்ற நிலையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை கொண்டு செல்வதற்கான முயற்சி நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குறித்த காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை போராடி அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை மேற்கொண்ட நிலையில் மூவர் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்களின் போராட்டத்தில் கலந்து ஆதரவை வழங்கினர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!