Friday, January 23, 2026
Huisதாயகம்லசா கொலை சந்தேக நபரை காணொளி எடுத்த பொலிசாருக்கு கடும் சிக்கல்..!

லசா கொலை சந்தேக நபரை காணொளி எடுத்த பொலிசாருக்கு கடும் சிக்கல்..!

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரை காணொளி பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் குறித்து சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.



இந்த விடயம் தொடர்பில் காவல்துறை மா அதிபரின் கவனம் செலுத்தப் பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கும் எதிர்கால நீதித்துறை நடைமுறைகளுக்கும் தீங்கு விளைவிப்பதால் இந்த சம்பவத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

காணொளி பதிவு மூன்றாம் தரப்பினரால் செய்யப்பட்டதா அல்லது காவல்துறை அதிகாரிகளின் ஒப்புதலுடன் செய்யப்பட்டதா என்பது விசாரணைகளில் கண்டறியப்படும் என்று அவர் கூறினார்.



இதேவேளை வடக்கின் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் பழிவாங்கும் நோக்கில் சில உயர் அதிகாரிகளால் இரகசிய ஆவணங்கள் கசியவிடப்படும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!