தேசிய சுகாதாரக் கொள்கைகள் மற்றும் மூலோபாயங்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் நோக்குடன் “தேசிய சுகாதார அபிவிருத்தி குழு” கூடியுள்ளது.
மக்களுக்குத் தரமான, பயனுள்ள மற்றும் வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்குவது பற்றியும், எதிர்காலத்தில் நாட்டின் சுகாதாரக் கொள்கைகள் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் இக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப் பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்கவின் தலைமையில், இலங்கை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது பற்றியும், எதிர்காலத்தில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முறையான திட்டத்தின்படி பயன்படுத்துவது பற்றியும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.


Recent Comments