சேவையில் இருந்து விலகிய, அரச மருத்துவ அதிகாரிகள் 1,277 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவான நிதியை, அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி நிலவரப்படி, இந்த தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசினால் அறவிடப்பட வேண்டிய பிணை முறி, தண்டப் பணம் மற்றும் கடன் முற்பண நிலுவைகளே இதற்குள் உள்ளடங்குகின்றன.
விசேட கணக்காய்வு அறிக்கை ஊடாக இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பல காரணங்களுக்காக, வெளிநாடு செல்லும் மருத்துவ அதிகாரிகள் சேவையை விட்டு விலகுவது மற்றும் சேவையை கைவிடுவது போன்ற செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதே நேரம் இந்த நிதியை அறவிடுவதற்கான நடவடிக்கைகளில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் கணக்காய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல், 2024 ஆம் ஆண்டு இறுதி வரை மொத்தம் 705 மருத்துவர்கள் தமது ஒப்பந்தத்தை மீறியுள்ளமை இந்த கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.


Recent Comments