Wednesday, November 19, 2025
Huisதாயகம்தமிழீழ விடுதலைப் புலிகளை யாரும் நினைவு கூர முடியாது; அநுர அரசின் அறிவிப்பு..!

தமிழீழ விடுதலைப் புலிகளை யாரும் நினைவு கூர முடியாது; அநுர அரசின் அறிவிப்பு..!

உரிழந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு அல்ல என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது. 2025 நவம்பரிலும் அவ்வாறு தான்.

உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு உரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும் அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை.


அவர்களுக்கான நினைவுத்தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேயே வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!