இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் இன்று (24) கொழும்பில் உள்ள கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் கேத்தரின் மார்ட்டினுடன் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் பிரிவினைவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கனேடிய அரசாங்கத்திடம் வெளியுறவு அமைச்சர் ஹார்த் வலியுறுத்தினார்.

இதில் விடுதலைப் புலிகளின் சின்னங்களை அங்கீகரிப்பது மற்றும் இலங்கையில் உள்ள இன சமூகங்களிடையே பிளவுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
கனடாவில் உள்ள சில குழுக்களின் நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹெரத் குறிப்பிட்டார்.
இதனிடையே, விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே உள்ளது என்றும், விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் உயர் ஸ்தானிகர் கூறினார்.
வெளியுறவு அமைச்சகத்தின் கொள்கையின் படி, இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்தும் உறுதி பூண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Recent Comments