வவுனியா பொது வைத்திய சாலையில் காவல் கடமையில் இருந்த பொலிஸ் சர்ஜென்ட் 46674 திலகரதன என்ற அதிகாரி, இன்று (24/11/2025) வைத்திய சாலையை சுற்றிப் பார்வையிட்டிருந்த போது அவரால் தரையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அந்த அதிகாரி இது குறித்து செவிலியர் குழுவினருக்கு அறிவித்ததுடன், குறித்த தங்கச் சங்கிலியை காவல் மையத்தில் பாதுகாத்து வைத்திருந்தனர்.
அதன் பின்னர், ஒரு பல்கலைக் கழக மாணவி தன் தாயாருடன் கண்ணீர் மல்க தன்னால் இழந்த தங்கச் சங்கிலியைத் தேடி வந்த போது, மருத்துவமனை காவல் மைய அதிகாரிகள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அந்த சங்கிலியை மீண்டும் அவருக்குக் கையளித்தனர்.
குறித்த முன்மாதிரியான செயற்பாட்டிற்கு எமது வாழ்த்துக்களை உளமாரத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


Recent Comments