Wednesday, December 3, 2025
Huisஉலகம்புதிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை ஆரம்பித்த ஐ.நா..!

புதிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையை ஆரம்பித்த ஐ.நா..!

ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை செவ்வாயன்று (25) முறையாகத் தொடங்கியது.

2027 ஜனவரி 1 முதல் இந்தப் பொறுப்பை ஏற்க உறுப்பினர் நாடுகள் குறித்த பதவிக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை, 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையின் தலைவரும் ஒரு கூட்டுக் கடிதத்தில் பரிந்துரைகளை அழைத்தனர்.

இது உலக அமைப்பின் தலைமை நிர்வாகியாக அன்டோனியோ குட்டெரெஸை மாற்றுவதற்கான போட்டியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

15 உறுப்பினர்களைக் கொண்ட பாதுகாப்பு பேரவை, அடுத்த ஆண்டு இறுதியில் 10 ஆவது ஐ.நா. பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக, 193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபைக்கு ஒரு வேட்பாளரை முறையாகப் பரிந்துரைக்கும்.

இந்தப் பதவிக்கு பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் சிலியின் முன்னாள் ஜனாதிபதி மிஷேல் பச்லெட், கோஸ்டாரிகாவின் முன்னாள் துணைத் தலைவர் ரெபேக்கா கிரின்ஸ்பான் மற்றும் அர்ஜென்டினாவின் தூதர் ரஃபேல் க்ரோஸி ஆகியோர் அடங்குவர்.

இறுதியில், ஐந்து நிரந்தர வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பேரவை உறுப்பினர்கள் – அமெரிக்கா, ரஷ்யா,பிரித்தானிய, சீனா மற்றும் பிரான்ஸ் – ஒரு வேட்பாளரை ஒப்புக் கொள்ள வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!