Wednesday, December 3, 2025
Huisதாயகம்கொழும்பிலிருந்து யாழிற்கு மாசி சம்பல் போத்தலில் போதைப் பொருள்..!

கொழும்பிலிருந்து யாழிற்கு மாசி சம்பல் போத்தலில் போதைப் பொருள்..!

கொழும்பிலிருந்து சூட்சுமமான முறையில் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து, விற்பனை செய்தவர் உள்ளிட்ட மூவர் யாழில் இன்று கைது செய்யப்பட்டனர்.

மாசி கருவாடு சம்பல் போத்தலுக்குள் மறைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டவரே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

போதை மாத்திரை கடத்தல் மற்றும் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாகக் கைதான மூன்று பேரும் யாழைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதேவேளை இரண்டு கிராம் மற்றும் மூன்று கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களும் யாழில் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரணைகளுக்குப் பின்னர் கைதான 5 பேரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!