அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தாம் முழு ஆதரவு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், தெரிவித்தார்.
அவர் கூறுகையில்,
“சர்வதேச தரத்திற்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் வகையில் பாடத்திட்ட மாற்றங்கள், ஆசிரியர் பயிற்சி மேம்பாடு, தொழில்நுட்ப அமைப்புக் கூறுகள் அனைத்தும் மிக முக்கியமானவை.
கல்வி மறுசீரமைப்பு என்பது நாட்டின் எதிர்கால முதலீடாகும்.
எனவே இதனை அரசியல் பார்வையைத் தாண்டி அனைவரும் ஒருமித்து ஆதரிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.


Recent Comments