Saturday, January 24, 2026
Huisதாயகம்ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி அவசியம் – ரிஷாட் பதியுதீன்

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி அவசியம் – ரிஷாட் பதியுதீன்

அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் முக்கியமான ஒரு பிரச்சினையை முன்வைத்தார்.

வெளிமாவட்டங்களில் இருந்து பாடசாலைக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கும் போது,

“நாட்டின் பல பகுதிகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் போக்குவரத்து வசதி சீராக இல்லாத காரணத்தால் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக கிராமப் புறங்களில் போக்குவரத்து வசதி மிக மோசமானது.

கல்வி துறையின் முன்னேற்றத்தைப் பேசுவதற்கு முன்னர், கல்வித் துறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவது மிக அவசியம். இதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!