Wednesday, December 3, 2025
Huisதாயகம்மூளையில் கிருமித் தொற்று; யாழ். போதனாவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

மூளையில் கிருமித் தொற்று; யாழ். போதனாவில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சியை சேர்ந்த சுப்ரமணியம் தசிகரன் என்ற 31வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே நேற்று (30) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபருக்கு கடந்த 22ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் 10 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக 27ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

மூளையில் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!