பேரிடர் காலப்பகுதியில் சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்க முடியாது போனவர்கள், எந்தவித இடையூறுமின்றி தமது வாகனங்களை செலுத்துவதற்குச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
காலாவதியாகிய சாரதி அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிப்பதில், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களைப் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்த முடியும் என இலங்கை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.


Recent Comments