யாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
வட்டுக்கோட்டை முதலி கோவலடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாளுடன் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், இளைஞனை கைது செய்ததுடன், இளைஞனின் உடைமையில் இருந்து வாளினையும் மீட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்திய போது , இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது


Recent Comments