Friday, March 6, 2026
Huisதாயகம்இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணி தெரிவு..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணி தெரிவு..!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணியின் நிர்வாகத் தெரிவு இன்று (30/12) இடம்பெற்றது.

கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற மேற்படி தெரிவுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை தலைவருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், செயலாளர் ந.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கட்சியின் வவுனியா மாவட்ட மகளீர் அணியின் தலைவியாக பிரதேசசபை உறுப்பினர் திருமதி.தர்சினி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக பிரதேச சபை உறுப்பினர் திருமதி.பத்திமா கெபிரியேல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

பொருளாளராக மாநகரசபை உறுப்பினர் திருமதி.யோகேஸ்வரி அவர்களும் உப தலைவியாக பிரதேச சபை உறுப்பினர் திருமதி.சரோஜாதேவி அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நிர்வாக சபை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!