மன்னார் மாவட்டத்தின் இருவேறு இடங்களில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 30.12.2025 இன்று மக்கள் குறைகேள் சந்திப்புக்களை நடாத்தினார்.
அந்த வகையில் முத்தரிப்புத் துறையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திலும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் மக்கள் குறைகேள் சந்திப்புக்கள் நடாத்தப்பட்டிருந்தன.

இந்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களில் மக்கள் பலரும் கலந்து கொண்டு தமது கோரிக்கைகளையும், குறைபாடுகளையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன் வைத்தனர்.

மேலும் குறித்த மக்கள் குறைகேள் சந்திப்புக்களின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளைப் பிரமுகர்கள், நகரசபை மற்றும், பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



Recent Comments