Friday, January 9, 2026
Huisஇந்தியாஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சார்க் பத்திரிகையாளர்கள் சர்வதேச மாநாடு இந்தியாவில் ஆரம்பம்..!

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி சார்க் பத்திரிகையாளர்கள் சர்வதேச மாநாடு இந்தியாவில் ஆரம்பம்..!

தெற்காசிய பிராந்தியத்தில் ஊடக சுதந்திரத்தை மையமாகக் கொண்ட சார்க் (SAARC) பத்திரிகையாளர்கள் மன்ற சர்வதேச மாநாடு நாளை ஞாயிற்றுக் கிழமை (04) இந்தியாவின் நாலந்தா பல்கலைக் கழகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாடு நாளையதினம் ஆரம்பமாகி இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னணி ஊடகவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியம் குறித்த அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.

சர்வதேச ஊடக நெறிமுறைகளை மதிக்கவும், ஊடகவியலாளர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கவும் பிராந்திய அரசாங்கங்களுக்கு அழுத்தம் கொடுப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

பிராந்தியத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தடைகள் குறித்து சர்வதேச தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!