Thursday, March 5, 2026
Huisதாயகம்கணவனை மீறி பாடசாலை கால நண்பர்களுடன் தொடர்பு; கணவன் செய்த அதிரடி..!

கணவனை மீறி பாடசாலை கால நண்பர்களுடன் தொடர்பு; கணவன் செய்த அதிரடி..!

கணவனின் சொல்லை மீறி பாடசாலை கால நண்பர்களுடன் தொடர்பை பேணிய மனைவியை இலங்கைக்கு கூட்டி வந்த கணவர், மனைவியின் கடவுச்சீட்டையும் எடுத்துக் கொண்டு பிரன்ஸிற்கு சென்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பாதிக்கப்பட்ட இளம் குடும்ப பெண் கிளிநொச்சியை சேர்ந்தவர் என்றும், கணவன் முல்லைத்தீவை பின்புலமாக கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது.

இவர்கள் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த நிலையில், மனைவியின் பாடசாலை கால நட்புகளால் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

பாடசாலை நண்பர்களின் நட்பை துண்டிக்குமாறு கணவன் வற்புறுத்தியும் , மனைவி அதனை காதில் வாங்காது நட்பை தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் தாயாருக்கு 50 ஆவது பிறந்தாளை சர்ப்பிரைஸாக கொண்டாடலாம் என கூறி மனைவியுடன் இலங்கைக்கு வருகை தந்த கணவன், கொழும்பில் வீடு ஒன்றை எடுத்து தங்கியுள்ளார்.

இதன் போது மனைவியின் பாடசாலை கால நண்பர்கள் விவகாரம் மீண்டும் சச்சரவை ஏற்படுத்திய நிலையில், கணவன் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக கூறப்படுகின்றது.

அதோடு பெண்ணின் பாஸ்போர்டையும், அவர் அணிந்திருந்த தங்க நகைகளையும் எடுத்து கொண்டு பிரான்ஸ் சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

பெண்ணின் சத்தம் வந்ததை அடுத்து வீட்டு உரிமையாளர்கள் கதவை திறந்து பார்த்த போது பெண்னை கண்டு அதிர்ச்சியடைந்து , உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!