அண்மையில் அலுவலகம் ஒன்றில் ஒளிவிழா நடைபெற்றுள்ளது. குறித்த அலுவலக ஒளிவிழாவுக்கு தமது பிள்ளைகளையும் அலுவலர்கள் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அலுவலகத்தில் வாகனம் ஒன்றின் சாரதியாகக் கடமையாற்றும் ஒருவரும் தனது மகனை ஒளிவிழாவுக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு வந்த மகன் அங்குள்ள அலுவலர்களுடன் மிகவும் சகஜமாகப் பழகத் தொடங்கியுள்ளார். அதன் பின்னர் அங்குள்ள அலுவலர்களுக்கு தனது அப்பாவின் வீரதீரப் பிரதாபங்களை கூறியுள்ளார்.
வீட்டில் தன்னுடன் சேர்ந்து அப்பா டான்ஸ் ஆடுவார் என கூறத் தொடங்கிய மகன் தனது அப்பா வீட்டில் மண்ணெண்ணை வாங்கி வைத்துள்ளதாகவும் அந்த வாகனத்தை (வெளியில் நின்ற அரச வாகனத்தைச் சுட்டிக் காட்டி) கொண்டு வந்து வீட்டில் மண்ணெண்ணை விட்டுவிட்டே ஓடுவதாகவும் கூறியதால் அலுவலர்கள் சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறித்த சாரதி அலுவலகத்தில் சிலருடன் முரண்பட்டு வந்ததால் மகனின் கூற்று அங்குள்ள சிலருக்கு தேன் போல் பாய்ந்துள்ளது. மகனை அவர்கள் மீண்டும் மண்ணெண்ணை விட்டு ஓடுவது தொடர்பாக கூறச் செய்து அதனை வீடியோவாகப் பதிவு செய்து திணைக்களத் தலைவருக்கு அனுப்பியுள்ளதாகத் குறித்த அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் திணைக்களத்தலைவரிடமிருந்து எந்தவித அசுமாத்தமும் காணப்படவில்லை என குறித்த அலுவலகத் தரப்புக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவளை வடக்கில் கல்வியுடன் தொடர்புடைய சில திணைக்களங்களில் உத்தியோகபூர்வ வாகனம் உள்ள நிலையிலும் அதனைப் பயன்படுத்தாது தமது சொந்த வாகனங்களை மேலதிகாரியின் அனுமதியுடன் இணைத்து எரிபொருள் மோசடி இடம்பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.


Recent Comments