2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்கான கல்விச் செயற்பாடு இன்று (05) தொடங்கிய போதிலும், 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முறையான கல்வித் திட்டம் எதுவும் வெளியிடப்படவில்லை என்று தரப்படுத்தப்பட்ட அதிபர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கல்வி நடவடிக்கைகளில் இடைவெளி உள்ளது என்று அதன் பொதுச் செயலாளர் நிமல் முதுங்கொடுவா குறிப்பிட்டார்.
பாடசாலை ஆரம்பமாகும் முதல் நாளில் பாடசாலைகளுக்கு மாணவர் பதிவு புத்தகங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
புதிய 6 ஆம் வகுப்பு தொகுதிகளில் உள்ள பிழைகள் மற்றும் அதிகாரிகள் அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்கிறார்கள் என்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.
இதேவேளை, இந்தப் பாடத் திட்டத்தை செயல்படுத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 7,181 பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recent Comments