வடக்கு மாகாணத்தின் கல்வித் துறைசார் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி.தனுஜா முருகேசன் அவர்களின் தலைமையில் பிரதம செயலாளர் செயலக கேட்போர் கூடத்தில் 08.01.2026 அன்று நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் 1ம் மற்றும் 6ம் தரங்களிற்கான புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் ஊடாக உரிய ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பாடசாலை அதிபர்களை தயார்ப்படுத்தல், புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய விரிவான பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குதல், வடக்கு மாகாணத்தின் கல்வி மட்டத்தை உயர் நிலைக்கு கொண்டு வருவதற்காக செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான விடயங்கள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன், மாகாண கல்வி அமைச்சு மற்றும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை தற்போதய பிரதம செயலாளர் விரைவில் ஓய்வு பெறவுள்ள நிலையில் பொருத்தமற்ற பின்கதவு நியமனம் பெற்ற ஒருவர் அக் கதிரைக்கு முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Recent Comments