Wednesday, January 14, 2026
Huisதாயகம்கோமாவில் இருந்து எழுந்த விமல் உண்ணாவிரத நாடகத்தில் குதிப்பு..!

கோமாவில் இருந்து எழுந்த விமல் உண்ணாவிரத நாடகத்தில் குதிப்பு..!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, சிவில் சமூக பிரதிநிதிகளுடன் இணைந்து சத்தியாக்கிரக போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12.01.2026) காலை முதல் தொடர்ச்சியான சத்தியாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை கடந்த காலத்தில் கல்விக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கு எதிராகவும் கடும் அநீதி நடைபெற்ற போது கோமாவில் இருந்த விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினர் தமது குறுகிய அரசியல் இருப்பிற்காக கல்வி விடயத்தில் தலையீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதே கல்வித் துறை சார்ந்தோரின் முடிவாக உள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!