Wednesday, January 14, 2026
Huisதாயகம்ஊழியர்களின் பண்டிகை முற்பண தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கை வெளியீடு..!

ஊழியர்களின் பண்டிகை முற்பண தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கை வெளியீடு..!

அரச ஊழியர்களுக்கான பண்டிகைக் கால முற்பணத் தொகையை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கையை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய தினம் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளுக்கு பண்டிகைக் கால முற்பணம் வழங்குவது தொடர்பான தாபனக் கோவையின் விதிகளுக்கமைய, தைப் பொங்கல், ரமழான், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்காகவும், புனித யாத்திரைகளுக்காகவும் தற்போது 10,000 ரூபாய் முற்பணமாகப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

இந்த முற்பணத் தொகையை வட்டியின்றி0 8 மாதத் தவணைகளில் அல்லது தேவைப்படின் அதற்கு முன்னதாகவோ மீளச் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த பண்டிகைக் கால முற்பணத் தொகையை 15,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப் பட்டிருந்ததுடன், அதற்கான சுற்றறிக்கையை தற்போது அமைச்சு வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!