கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார்.
எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் துறையில் செயல்படும் தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட பல தரப்புகளும் அவருக்கு எதிராக தீவிரமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இந்த நிலைமையை பயன்படுத்தி, ஜே.வி.பி. கட்சியின் அடிப்படை ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் நோக்கில், ஹரிணி அமரசூரியவை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
அவரை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய பின்னர், பாராளுமன்ற சபைத் முதல்வரான பிமல் ரத்நாயக்கவை புதிய பிரதமராக நியமிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டிருந்ததுடன், அதன் பின்னர் பாகிஸ்தானுக்கும் விஜயம் செய்துவிட்டு இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
எனினும், தரம் ஆறுக்கான கல்வி சீர்த்திருத்தங்கள் 2027ஆம் ஆண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிரதமர் பதவியில் ஹரிணி அமரசூரிய தொடர வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Recent Comments