Friday, January 23, 2026
Huisதாயகம்சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி நாளை போராட்டம்..!

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி நாளை போராட்டம்..!

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவை பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்தி, கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் நாளை

(21) காலை 10 மணிக்கு அமைதிவழிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப் பல சிவில் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் சட்டவிரோதக் கட்டுமானம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதற்காக, சட்டமா அதிபர் மேற்கொண்ட அத்துமீறிய தலையீடே இந்தப் போராட்டத்திற்கு உடனடி காரணமாக அமைந்துள்ளது.

பாரிந்த ரணசிங்க சட்டமா அதிபராகப் பதவியேற்றது முதல், அந்தப் பதவிக்குப் பொருத்தமற்ற 20-க்கும் மேற்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கின் மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மீளப் பெற்றமையும் இதில் உள்ளடங்கும்.

சட்டமா அதிபர் தொடர்ந்து முன்னெடுத்து வரும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக இந்த அமைதிப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு வலியுறுத்திப் பலமான எதிர்ப்புக்கள் உருவாகியுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments

error: Content is protected !!